திங்கள், 20 ஜூலை, 2009

வளி தடம் 39

எனக்கு தெரிஞ்சு ரெண்டு வாசல் பஸ்தான் முதல்ல 39-கு , பிறகு அத 4வாசல் பஸ்ஸா விட்டாங்க, அதோட நம்பர் TCB 7656 நம்ம ஊருக்கும் கடியப்படினம் ஊருக்கும் தான் அந்த பஸ்ஸ விட்டாங்க, நான் 2-g கிளாஸ் படிக்கும் பொது எங்க அண்ணனுக்கு புது நன்மை குடுத்தாங்க அன்னைக்கு தான் இந்த புது பஸ் ஊருக்கு வந்தது , நடுல உள்ள வாசல் பக்கம் நிறைய இடம் கிடக்கும் , அதுல மீன் கொண்டு போறவங்க பாதிரம் வைப்பாங்க . அதுல தான் நானும் அருள்தாஸ் (மேலத்துரை ),கொட்வின் ,எல்வின் எல்லாரும் நின்னு போவோம் . எங்க பஸ் உள்ள பின் சீட் ரெம்ப விசேசம் அதும் ஜன்னல் சீட் பெரும்பாலும் மதன் அண்ணன்தான் இருப்பாங்க , அப்புறம் அஜித் (கோவளம் ) அந்த சீட்ல இருந்துட்டு ஈயா ........ அப்படின்னு சத்தம் போடறதுனால அவர கொஞ்ச நாள் அப்பிடியே கூபிட்டோம் . ராதாகிருஷ்ணன் , ராமையா ரெண்டு பெரும் பெர்மநேண்டா டிரைவரா இர்ருந்ததால அவங்களுக்கும் சந்திரன் , மணி கண்டக்டர்க்கும் எங்க வீடுகள்ல ஏதாவது விசேஷம் வந்தா கார்டு குடுப்பாங்க அவங்களும் வருவாங்க . அந்த பஸ் நான் காலேஜ் தேர்டு இயர் படிக்கும் வரகும் ஒடிச்சு . அப்பிரம் அத மாத்திட்டு புது பஸ்ஸ ரெண்டு வாசல் பஸ் விட்டாங்க . கொஞ்ச நாள் பட பட-நு சௌண்டோட ஓடினாலும் அந்த நாலு வாசல் பஸ்ஸ மரகமுடியல . அந்த பஸ் உள்ள நாள் ஸ்கூல் படிக்கும் பொது கூட்டத்துக்குள்ள நல்லா இடித்து ஏறுவேன்னு எங்க பெரியப்பா சொல்லும்போது எனக்கு நாலு வாசல் பஸ் நினைவு வந்து போகும் . நாடு வண்டியில பாம்பா கிடக்கு நு மொட்டை கண்டக்டர் அடிக்கிற கமெண்ட் ரெம்ப்ப பாமௌஸ் . நான் மட்டும் இல்ல எங்க ஊருல உள்ள எல்லாரோட நெருகுன ஒண்ணா இருந்த அந்த பஸ் நம்மளோட ஊரு அடையாளங்களில் ஒன்னு .

1 கருத்து: