புதன், 29 ஜூலை, 2009

நண்பர்களே சந்திப்போம் வாருங்கள்...!!!!!! -

எட்மண்ட் publisher-cum-editormanam olirnthida- tamil monthly

நாகர்கோவிலில் இருந்து ஊரின் நினைவுகோளோடு முதன் முதலாக இந்த பிள்ளைதோப்பு குரூப்பிர்காக எழுதுகிறேன் . இது கடமைக்காக மட்டுமல்ல .உணர்ந்ததை கொடுபதுகக . என் உணர்வுகளை உரசி பார்த்த உங்கள் முயற்சிஇன் வளர்ச்சியாக . பிள்ளைதோப்பு வலைத்தழம் பார்க்க நேர்ந்து பல மாதங்கள் ஆகிவிட்டது . எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை . நீங்கள் நினைக்கலாம் அப்படி என்ன வேலை என்று .

சொல்கிறேன் நண்பர்களே , தம்பிகளே ,நான் சொந்தமாக "மனம் ஒளிர்ந்திட" மாத இதழ் நடத்துகிறேன் . இது வருங்கால இந்தியாவின் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு சிற்பி என எண்ணுங்கள் . அடுத்த படியாக "எலிசா ஐ ஏ எஸ் ஆகடமி" ஆரம்பித்து நல்ல ஸ்ட்ரெந்துடன் தொடர்கிறது . "மனம் பப்ளிகேஷன்ஸ்" வெளியீடுகள் தொடர்கிறது . மற்றும்
"மேண்டோரிஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் " எம் பி ஏ காலேஜில் பணி செய்கிறேன். சரி . இது என்னை பற்றி .

நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கல்?. உங்களின் உள்ளுர உணர்வுகள் அனைத்தும் ஜெயிக்க வாழ்துகிறேன் . என் நண்பர்களே உங்கள் கடந்த காலத்தை உனர்வுகளின் பொக்கிஷமக பாதுகாத்து வைத்திருப்பது உணதமான விசியம் . அந்த உந்த உணர்வுகள் ஐ பகிற்ந்து கொள்ள இந்த வலைத்தழம் அமைத்தது இனிமையான உணர்வுகளை அசை போட உகந்தது . நம் பிறந்த அந்த அழகிய கிராமமான எழில் மிகு சொர்க்கம் பிள்ளைதோப்பு . நான் பார்த்ததை , கேட்டதை, உணர்ந்ததை , உணரவைகபட்டத்தை எழுபத்து ஒன்பதாம் வருடம் தொட்டு எழுத விரும்புகிரைன் . ஆயிரத்து தொள்ளாயிரம் முதல் கேள்விப்பட்டதை முயற்சித்து எழுதுகிரேன் . இந்த ஊரின் உணர்வுகள் நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும் . நம் சந்ததிக்கு படிப்பினயும் , உறமும் , அறமும் கொடுக்கும் . என்னை எழுத விட்டால் நாள் முழுதும் எழிதி கொண்டே இருப்பேன். நண்பர்களே உறக்கம் என்பது இறப்புக்கு சமானம்- என் கவிதை வரிகளோடு இந்த காலை பொழுதில் விடை பெருகிறேன். மீண்டும் 1979 திர்ம்புவோமா . அதற்காக காத்திருப்போம் . என்றும் உங்கள் முயற்ச்சியில் அக்கறை காட்டும் - எட்மண்ட் publisher-cum-editormanam olirnthida- tamil monthly

குறிப்பு : இனி சுரேஷ் அவர்களே மிக சரியாக தமிழாக்கம் பண்ணுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக