வெள்ளி, 24 ஜூலை, 2009

சிந்தனை செல்வன் சுமல்ட் - மொட்டயம்பிள்ளை

எங்க ஊர்ல பழைய காலத்துல நிறைய மந்திரவாதி இருந்ததா சொல்வார்கள் நிறைய பேய் கதைகள் சொல்வார்கள் ஆனால் நான் சிறு வயதில் பார்த்து பயந்த ஆள் மொட்டயம்பிள்ளை / கடிச்சான் பிள்ளை . அப்புறம் அவருக்கு வயசு ஆகும்போது ஜெலச்டின் பிள்ளை (மீசை) அவருக்கு அரிஷ்டம் வாங்கி கொடுத்து மந்திரம் படிச்சாரு அது சும்மா டூப்புன்னு இப்பதான் புரியுது. எது எப்படியோ பலபேர் பயந்தங்க என்பது மட்டும் உன்ன்மை. சாயுங்காலம் தெக்க விளையாடும் போதும் அவர வச்சி விளையாடி அவர் அடிக்க வரும் போதும் எல்லாரும் ஓடறதும் சந்தோசம் தான் இப்ப எல்லாம் யாரும் விளையாடுறது இல்ல பயக்களுக்கு சைட் அடிக்கவே நேரம் சரியா இருக்கு. மொட்டயம்பிள்ளையின் மந்திர பாஷையில் எனக்கு தெரிஞ்சது

கிண்கிணி மங்கினி மாலை கண்காணி

தொட்டிச்சி பட்டிச்சி

இந்திரவதி சந்திரவதி

ஜார்ஜ் முனி அம்ப்ரோஸ் முனி

வெள்ளை றேர் கறுத்த றேர் .

எண்ணமும் எழுத்தும் - "சிந்தனை செல்வன்" சுமல்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக