நாய் என்றால் பிரவுனி தான். எனக்கு மிக மிக நெருக்கமானது. அது எங்க வீட்ல வைக்கும் பழய சோற்றையும் கஞ்சி தண்ணீயும் நக்கி குடிக்கும் சத்தம் இன்னும் என் காதுகளில் கேட்கிறது.கூட பழய மீன் குழம்போ கறி குழம்போ சேர்ந்தால் அவனுக்கு கொண்டட்டம் தான். வலாட்டுவத்தில் அவனுக்கு நிகர் அவனே!
அப்போ சிறுவர்களாக இருந்த ராபி,எபி,இதயன் அதோடு நன்றாக விளையாடுவார்கள். அது எப்பிடின்னா , பிரவுனிக்கு ஞாயிற்று கிழமை கூட தெரியும். பத்து மணி பஸ்ல வரும் எங்க பிளெமிங் அண்ணனை பார்க்க காத்துக்கிட்டிருக்கும். அவுங்க அதுக்குன்னு ஸ்பெஷல்லா கறி கடையில வாங்கிட்டு வர்ற எலும்பும் சவ்வும் அதுக்கு ரொம்ப பிடிக்கும். பஸ்ல இருந்ந்து அவுங்க இறங்கினதும் ஓடி பொய் அவுங்க கூடவே வாலாட்டிக்கிட்டு நடந்து வரும். அவுங்களும் அது பக்கத்துல உக்காந்து ஒன்னு ஒண்ணா ஊட்டி விடுவாங்க.
இன்னொரு விஷயம் - எங்க அம்மாச்சி இந்த நாயோடு உரையடுவது தான். அதுவும் அவங்க சொல்றத அப்படியெ கேட்கும். நாய் , மாடு ,கோழி தவிர மனிதர்களையும் ஒரே வார்த்தையில் அடங்க வைக்கும் தனி திறமை அம்மாச்சியிடம் நிறைய உண்டு. அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட பல விஷயங்கள் தூத்துக்குடியில் இன்று தலை நிமிர காரணமாய் இருந்தது நிதர்சனம். (எடுத்துகாட்டு : நேரம் தவறாமை, திட்ட மிட்டு செயல் படுதல் ,இறை வழிபாடு )
பிரவுனியை பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயம் நியாபகம் வருது. நம்ம பிலோமி அத்தை (டோமி அம்மா)வீட்ல ஒரு நாய் இருபத்து வருஷமா இருந்தது. வெள்ளையும் கருப்பும் கலந்த கலர். எதோ ஒரு சந்தர்பத்துல அது டோமி அப்பாவை காப்பாற்றியதாக எனக்கு நியாபகம் இருக்கு. இதைப்பற்றி யோசித்தாலும் வேறு ஒன்றும் நியாபகத்தில் இல்லை. டொமினிக் ( வாத்தியாரே ) இதைப்பற்றி எதாவது எழுதினால் நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக