செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இதயன் தாவு

நண்பர்களே இது இதயன் தாவு பற்றி என் பார்வை......
இதயனுக்கும் கடலுக்கும் நீண்ட தொடர்பு உண்டு.அவன் ஒவ்வொரு முறை கடல்
குளிக்கும் பொதும். கடலுக்கு பிடிப்பதில்லை.பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொது
அனைவரும் கடல் குளிப்பது வழக்கமானது.ஒருமுறை எல்லாரும் கடல் குளிக்கும் பொது அவன் மட்டும்
கடற்கரையில் படுத்து இருந்தான்.என்னா இதயா நீ குளிக்கவில்லையா? என்று கேட்டதர்க்கு
சும்மா சன் பாத் எடுக்கிறேன் என்றான்.இவனாவது சன் பாத் எடுப்பதாவாது அதன் பிற்குதான் தெரிந்தது அலையில் மாட்டி வாய் மற்றும்
மூக்கு முழுவதும் மண்ணாக இறுந்தது.
அடுத்த கிறிஸ்துமஸ் வந்தது எல்லாரும் வழக்கம் பொல கடல் குளிக்க சென்றெம்.அனைவரும் ஆழமான பகுதிக்கு
சென்றபொது இரண்டு கை மட்டும் மேலெ தெரிந்தது.நொடியில் புரிந்தது இது இதயனாகத்தான் இருக்கும்.நான் மற்றும் அஷொக்
அவனை நே க்கி நீந்தினொம்.அவன் என் கழுத்தை பிடித்து தண்ணீரில் அமுக்கினான்.என்க்கு மூச்சு முட்ட அவனை முழு பலத்தையும்
திரட்டி தூக்கி வீசினேன்.நல்ல வேளை பக்கத்தில் மேடான பகுதி இருந்தது.அதில் பொய் விழுந்தான். அதிலிருந்து அந்த ஆழ்மான்
பகுதிக்கு இதயன் தாவு என்று பெயர் வந்தது.அதிலிருந்து அந்தபகுதி மிகவும் பிரபலம்.இதயனை இனி கடல் குளிக்க வரக்குடாது என்று வற்புர்த்துவதுண்டு
ஆனாலும்அவன் அவனுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதில்லை.
இம்முறை 2004,டிசம்பர் 25 சுனாமிக்கு முந்தைய நாள்.கடல் குளிக்க நண்பர்கள் அதிகம் இருந்தனர்.
சுந்தர் மற்றும் ஜெகன் நண்பர்கள் நாகர்கொவிலில் இருந்து வந்திருந்தனர்.கடல் குளித்துக்கொண்டிருக்கும் பொது
இதயனின் கிளாஸ்மெட், கடியப்பட்டணத்தில் இருந்து வள்ளத்தில் அலையய் கிழித்துக்கொண்டு வந்திறின்கினான்.நண்பர்கள் அனைவருக்கும்
வள்ளத்தில் செல்ல ஆர்வம் அனைவரும் அதில் ஏர வள்ளம் புரப்பட்டது.தீடிரென ராட்சச அலை வர நிலைமையை புரிந்து கொண்டு
நான் மற்றும் ஜெகன் கடலில் குதித்து விட்டாம்.அலை வள்ளத்தை தலை கீழாக கவிழ்த்தது.வள்ளத்திற்குள் இதயன்,சுந்தர்,ஜாண்சன் அண்ண்ன்
மாட்டிக்கொண்டனர்.அவர்களை மீட்டு எடுத்தது தனிக்கதை.அடுத்த நாள் சுனாமி வந்ததால் இந்நிகழ்ச்சியை அனைவரும் மறந்து விட்டனர்.
இவ்வளவு நடந்தபிரகும் அவன் கிறிஸ்துமஸ் பண்டிகை கடல் குளிப்பை நிறுத்தவில்லை.
அவன் தைரியத்திர்க்கும் சுயமரியாதைக்கும் என்னுடய வாழ்த்துக்கள்
ஜுலியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக