வியாழன், 6 ஆகஸ்ட், 2009

மூந்தங்கிணறு

பொதுவாக திருநெல்வேலிக்காரர்கள் மற்றும் சுத்துவட்டாரத்தினர் " நான் தாமிரபரணி தண்ணியை குடித்து வளந்தன்" என்று டயலாக் விடுவது தென் மாவட்டங்களின் மறபு. நடிகர் விக்ரம் கூட ஒரு படத்தில், கோயமுத்தூர் காரராக நடிக்கும்போது, நெல்லையிலிருந்து வரும் வில்லன் நடிகரைப்பார்த்து நீ தாமிரபரணி தண்ணியை குடிச்சவன்னா , நான் சிறுவாணி தண்ணியை குடிச்சவன்னு ஒரு டயலாக் உடுவார். இதுவே நம்ம ஊர்க்கரனா இருந்தா என்ன சொல்லியிருப்பான்... நினைத்தால் சிரிப்புத்தான் வரும் " நான் மூந்தங்கிணத்துத் தண்ணியை குடித்து வளந்தவன்."

எப்படி நகர்கோவில்,நெல்லை,தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்கு தாமிரபரணி ஒரு வற்றாத ஜீவ நதியாக உள்ளதோ அதுபோல நம்ம பிள்ளைதோப்பு,அழிக்கால்,மேலத்துறை மூன்ற்று ஊருக்கும் வற்றாத ஜீவகிணறு நம்ம பக்கத்து கிராமமான கன்னக்குறிச்சியிலிருக்க்ற மூந்தங்கிணறு தான். முற்காலத்தில் ஒரு வீட்டுக்கு ஓரிரு குடங்கள் தினந்தோறும் தண்ணி சுமந்து தான் கொண்டு வருவார்கள். தோராயமாக 2அல்லது 3கீமீ தூரம் இருக்குமென்று நினைக்கிறேன். பின்பு நான் சிறுவனாக இருக்கும்போது, டேங்க் கட்டி பைப் லைன் போடப்பட்டது. மக்கள் அப்பாடாவென்று பெருமூச்சு விட்ட நேரம், ஒரு பகுதி மக்கள் அவர்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று முறையிட்டார்கள். முறயீட்டை சம்பந்தப்பட்டவர்கள் காது கொடுக்காததால், இந்த செட் அப் வெட்டி எறியப்பட்டது. மீண்டும் தண்ணீர் சுமக்கும்படலம் சில வருடங்களுக்கு தொடர்ந்தது.

இந்த தண்ணியை குடித்தால் அது ஒரு தனி சுவைதான். கிணற்று தண்ணியென்றே சொல்ல முடியாது. இதை குடித்து பழகிவிட்டு, வெளியூர்களுக்கு செல்லும்போது அங்குள்ள தண்ணீர் எதோ ரொம்ப கசந்தது மாதிரி ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. நம்மில் பலர் இந்த தண்ணீரை விரும்பிகுடித்தவர்களே!!. சென்னையில் சில மாதங்கள் வேலை பார்த்த போது கூட, தண்ணீர் தகம் அடங்கவே செய்யாது. எப்பொண்டா நம்ம ஊரு தண்ணி குடிக்கமுடியுமுன்னு தோணும். ஆன இப்போ நம்ம ஊரு பைப்புல வர்ற தண்ணி அந்த அளவுக்கு இல்ல. போன வாரம் ஊரில் இருந்தப்பொ அம்மாகிட்ட கேட்டேன். அப்போதான் தெரிஞ்சுது, அது மூந்தன்கிணத்து தண்ணி இல்லண்ணு. கல்லுக்கட்டியிலிருக்கிர வேறு எதோ ஒரு கிணற்றிலிருந்து இப்போ தண்ணி வருதாம். நம்ம ஊர்ல மறிப்போன அல்லது நம்ம இழந்து போன பல விஷயங்கள்ள அதுவும் ஒண்ணாயிற்று.

"பத்தோட பதினொண்ணு! அத்தோட இதுவும் ஒண்ணு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக